Thursday, May 29, 2008

பொண்ணு பார்க்க போகும்போது :)))

பொண்ணு பார்க்க போகும்போது

ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு

அதிர்ச்சி நடந்திருக்கும். விசு மாதிரி

சத்தியம் வாங்கிகிட்டுதான் பாதிபேர்

கல்யாணம் செஞ்சிருப்பாங்க.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில்

பெண்பார்க்கும் படலத்தில் குடும்பப்பாட்டை

ஒவ்வொருவரும் பாடும் இந்தப் பாட்டு மறக்க

முடியாத ஒன்று.

பாட்டின் கிளைமாக்சை மாத்திரம் போட்டிருக்கேன்.

முழு பாட்டையும் பார்க்க இதோ

8 comments:

மங்களூர் சிவா said...

பாட்டுல , விசு வாங்கின சத்தியம்

சூப்பர்!!

pudugaithendral said...

வாங்க சிவா,

மறக்க முடியாத படம்.

நிஜமா நல்லவன் said...

ஹா ஹா ஹா ஹா ஹா .... எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பு தாங்கலையே:)

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்.

ஏதோ என்னால ஆனது.

Anonymous said...

எனக்கும் பாடிய அனுபவம் உண்டு. டேப் கூடவே ராகம் போட்டு படுவேன். என் தங்கை வந்து சத்தத்தை குறைத்தும் என் குரல் மட்டும் கர்ண கொடூரமாக ஒலிக்கும். இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அப்போது இதுக்காக சண்டை எல்லாம் போட்டிருக்கோம். பொண்ணு பார்க்கும் போது படிய அனுபவம் எல்லாம் இல்லை. அட்லீஸ்ட் யாரவது படுவதை கேட்கலாம் என்றால் அதுக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. பட் படத்தில் இந்த பாட்டு மூணு ஜோடிகளின் நினைவுகளில் அழகாக இருக்கும். அதிகம் விரும்பி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

pudugaithendral said...

வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.

பாடுவது பிடித்தமான ஒன்று.

ஆயில்யன் said...

// புதுகைத் தென்றல் said...
வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.
///

பாட்டு பாடத்தெரியாதுன்னு சொன்னா தப்பிச்சது நீங்க அவுக :))))

ஆயில்யன் said...

// புதுகைத் தென்றல் said...
வாங்க மதுமதி,

நானும் ரேடியோவோடு பாடிக்கிட்டு தான் இருப்பேன்.

பாட்டு கத்துகிட்டதுனால குரல் சுமாராவே இருக்கும்.

பொண்ணு பாக்கும் போது பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்.
//


பாட்டு பாடத்தெரியாதுன்னு சொன்னா? தப்பிச்சது நீங்க இல்லை அக்கா!

அவுக :))) (பாவம் மனுசன்! இப்ப நீங்க பாடிக்கிட்டிருக்கும்போதெல்லம் ரொம்ப ஃபீல் பண்ணுவாக அப்ப கேட்டப்ப பாடத்தெரியாதுன்னுச்சுப்பா அப்படின்னு !!!)